குமரி, கோவைக்கு அதிவேக ரயில் சாத்தியமே!
'தற்போதுள்ள தண்டவாளத்திலேயே, சென்னை - கன்னியாகுமரி, சென்னை - கோவை இடையே, மணிக்கு, 200 கி.மீ., வேகத்தில் செல்லும், அதிவேக ரயில்களை இயக்க முடியும்' என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
சென்னை - கன்னியாகுமரி இடையே, 702 கி.மீ., துார ரயில் பாதையில், சென்னை - செங்கல்பட்டு - விழுப்புரம் வரை, இரட்டை ரயில் பாதை உள்ளது; விழுப்புரம் - மதுரை இரட்டை ரயில் பாதை பணி நடக்கிறது. சென்னை - கோவையை பொறுத்தவரை, 497 கி.மீ., துாரத்திற்கு, ஏற்கனவே இரட்டை பாதை உள்ளது. தற்போது உள்ள தண்டவாளத்தில்
அதிகபட்சம்,...
more... 100 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதே தண்டவாளத்தில், சில மாற்றங்களை மேற்கொண்டால், 200 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:சிக்னல் தொழில்நுட்பத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கும். மேலும், 200 கி.மீ., வேக இயக்கத்திற்கு ஏற்ற ரயில் பெட்டிகள் வாங்க வேண்டும். இந்த இரண்டு மாற்றங்களை கொண்டு, தற்போது உள்ள தண்டவாளத்திலேயே, அதிவேக ரயில்களை இயக்க முடியும். தேவைப்பட்டால், ரயில்களை வேகமாக இயக்க, சில இடங்களில் வளைவான பாதையாக செல்லும் தண்டவாளங்களை மாற்ற வேண்டி இருக்கும்.
இவையெல்லாம் சாத்தியம் என்பதால், ரயில்வே அமைச்சகம், இந்த பாதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, ஆய்வை துவக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.அதிவேக ரயில்களை இயக்கினால், சென்னை - குமரி பயண நேரம், 13 மணி நேரத்தில் இருந்து, 6 மணி நேரமாக குறையும். தமிழகத்தின் முக்கியமான இரண்டு வழித்தடங்கள் இவை என்பதால், வர்த்தகம், வியாபாரம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். வடமாநிலங்களில் இருந்து, சென்னை வரும் ரயில்கள், தென் மாவட்டங்கள் வரை இயக்குவது எளிதாக மாறும். இந்த விஷயத்தில், மாநில அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.